அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை என்னவென்று கூட கேட்க நேரமில்லாத விடியா அரசு!

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு, தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் என்னவென்று கூட கேட்க நேரமில்லாதது போல் இருப்பது, அரசு பள்ளி ஆசிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விடியா திமுகவின் வாரிசு அமைச்சர் உதயநிதி, அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.1984-ல் இருந்து தேர்தல் பிரசாரம் செய்து வருபவர் உதயநிதி... அன்பில் மகேஷ்  பொய்யாமொழி | Udhayanidhi Stalin campaign for DMK from 1984, says Anbil  Mahesh Poyyamozhi - Tamil Oneindia

அப்போது இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் கூறுவதற்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கைகள் என்னவென்று கூட கேட்க நேரமில்லாமல் அமைச்சர்கள் சென்று விட்டதால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.கடந்த 10 ஆண்டிற்கு மேலாக பணிபுரிந்த தங்களை, விடியா திமுக அரசு பணியிறக்கம் செய்ய ஆணை பிறப்பித்து இருப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

Exit mobile version