உதவியவர் வீட்டை சேதப்படுத்த உருட்டுக்கட்டையுடன் உலா வந்த திமுகவினரின் உழைப்பாளி பெண்கள்… CCtv உள்ளே

சென்னை திருவொற்றியூரில் திமுகவை சேர்ந்த பெண்கள் சிலர், அதிமுக பிரமுகர் வீட்டின் கதவு மற்றும் கேட்டை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருவொற்றியூரை அடுத்த பலகைதொட்டி மீனவ கிராமத்தில், 60 குடும்பங்களை திமுகவினர் விரட்டி அடித்தது தொடர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் புகார் அளித்தார். திமுகவினரின் தாக்குதலுக்கு அஞ்சி பழவேற்காடு, திருவொற்றியூர், ராயபுரம் பகுதிகளில் தஞ்சம் புகுந்த 60 குடும்பங்கள், ராஜேந்திரன் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறை உதவியுடன் பலகைதொட்டிக்கு திரும்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் அவரது சகோதரர் சொக்கலிங்கத்தின் ஆதரவாளர்களான பெண்கள் சிலர் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தினர்.

வீட்டின் கதவு, ஜன்னலை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version