மே 1 அன்று மின்சார ரயில்கள் சேவை மாற்றம்

வருகின்ற 01.05.2021, சனிக்கிழமை, மே தினத்தன்று (தேசிய விடுமுறை) புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை கோட்டம் மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: 

தேசிய விடுமுறை நாளான மே தினத்தை முன்னிட்டு, வரும் 01.05.2021, சனிக்கிழமை அன்று, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.

Exit mobile version