சந்திரயான் – 3 – நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு இன்று செல்கிறது!

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு இருக்கிற ‘சந்திரயான் – 3’ விண்கலம், இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட உள்ளதாக, இந்திய விண்வெளி ஆராய்சிசி நிறுவனமான இஸ்ரோ  தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, மூன்றாவது முயற்சியாக, கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோ ஏவியது.

புவி வட்டப்பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் – 3 விண்கலம், கடந்த 1 ஆம் தேதி நிலவை நோக்கிய பயணத்தை துவங்கியது. இந்நிலையில் இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின்வருமாறு காண்போம்.

நிலவுக்கான பயணத்தில், மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை, சந்திரயான் – 3 விண்கலம் கடந்துள்ளது. திட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இன்று இரவு 7 மணியளவில், சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்ட உள்ளது. நிலவுக்கு அருகில் விண்கலம் சுற்றி வரும் போது, இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதையடுத்து, வரும் 23ஆம் தேதி நிலவில் மென்மையாக தரையிரங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version