தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் அதிகபட்சமாக 4 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இது தவிர மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை பொழியும் போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதே நேரம் மழை பெய்யாத இடங்களில் கடுமையான வெப்பம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெப்பநிலையை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும்.

Exit mobile version