தேர்தலையொட்டி திருச்சியில் மத்திய துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், திருச்சி திருவெறும்பூரில் மத்திய துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தபடும் வகையிலும் தமிழகம் முழுவதும் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில போலீசார் இணைந்து திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தினர்.

Exit mobile version