மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை

அரசு ஊழியர்கள்  சம்பளம், ஓய்வூதியம், வாங்கிய கடன்களுக்கான வட்டி, மானியம் ஆகியவை தவிர்க்க இயலாத செலவுகள் என்று தமிழக அரசு வகைப்படுத்தி உள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில், இந்த செலவுகளை எதிர்கொள்ள மொத்தம் 94 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும், தற்போது, 61.85 சதவீதமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2015-16-ல் இது 59 புள்ளி 09 சதவீதமாக இருந்ததாகவும், கடந்த 2016-17-ல் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்துக்கு 39 ஆயிரத்து 246 கோடி ரூபாயும், ஓய்வூதியம் வழங்க 18 ஆயிரத்து 879 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடன்களுக்கான வட்டிக்கு 20 ஆயிரத்து 533 கோடி ரூபாயும், மானியங்களுக்கு 16 ஆயிரத்து 92 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மானியங்களில் மிக முக்கியமானதாக உணவு மானியம் உள்ளது என்றும், பொது விநியோக திட்டத்திற்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய கணக்கு தணிக்கைத் துறை கூறியுள்ளது. இப்படியாக, அரசின் நிகர வருமானத்தில் பெரும் பகுதி தவிர்க்க முடியாத கட்டாய செலவுகளுக்காக ஒதுக்கப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version