உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மதுரையில் கொண்டாட்டம்

உலக தாய்ப்பால் வார விழா மதுரை மாநகராட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.உலக தாய்ப்பால் வார விழா இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. மதுரை MGR பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும் தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளது பற்றியும் விழாவில் விளக்கப்பட்டது. குழந்தை பிறந்த முதல் 2 ஆண்டுகள் தவறாமல் தாய்ப்பால் ஊட்டினால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி, புத்தி கூர்மை, சீரான எடை உள்ளிட்ட பலன்கள் குறித்தும் மருத்துவர்கள் தாய்மார்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. தாய்ப்பால் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.

Exit mobile version