750 இடங்களில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தம் – ஏ.கே.விஸ்வநாதன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றங்களை தடுக்கும் விதமாக பாண்டிபஜார் , மாம்பலம் பகுதிகளில் 750 இடங்களில் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகர் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையத்தை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாம்பலம், பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

750 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், டிரோன் கேமிரா மூலம் கண்காணிக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள 7 இடங்களில் சி.சி.டி.வி கேமிரா மற்றும் பைனாகுலர் கொண்டம், முகத்தை அடையாளம் காணும் நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்தார். மூன்று இடங்களில் சிறிய காவல் கட்டுப்பாட்டு அறையும், 5 இடங்களில் கண்காணிக்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version