சிபிஎஸ்இ 10ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள், அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன. மாணவ மாணவியர் cbseresults.nic.in, cbsc.nic.in இணையதளங்கள் வாயிலாக தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இந்த வருடம் 27 லட்சம் மாணவ மாணவியர் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். அதில், ஒட்டுமொத்தமாக 91.1 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கேராளவைச் சேர்ந்த பாவனா, 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவர்கள் தங்களுடைய பதிவெண் அல்லது வரிசை எண்ணை பயன்படுத்தி, தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுக்கவும் இணையதளத்தில் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
Discussion about this post