சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் !

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21 லட்சத்து 86 ஆயிரத்து 940 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 16 லட்சத்து 96 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடைபெறுகிறது. இன்று பத்தாம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 12ம் வகுப்பு மாணவர்கள் தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று எழுதுகின்றனர். நாடு முழுவதும் 7 ஆயிரத்து 240 மையங்களில் மொத்தம் 24 ஆயிரத்து 491 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Exit mobile version