சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி காவலில் இருக்கும் சிதம்பரத்திடம், சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் சிபிஐ பிடி இறுகி வருவதால், சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான, சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கு விவரங்களை பெற சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக வங்கி கணக்குகள் உள்ள சிங்கப்பூர், மொரீசியஸ், இங்கிலாந்து, பெர்முடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சிபிஐ கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version