காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

குட்கா வழக்கு தொடர்பாக , விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரி குல்சார் பேகம் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாதவராவ், சீனிவாச ராவ் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குமூலம், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சொன்ன குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. 

Exit mobile version