பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5 பேர் மீது சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு, சபரி ராஜன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் முகாமிட்டு இருந்த சிபிஐ அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமை, கடத்தல், மானபங்கம், திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version