News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சேலம் – சென்னை ரயில் கொள்ளை!  பர்தி பழங்குடி கொள்ளையர்கள் 2 பேர் கைது

Web Team by Web Team
October 13, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சேலம் – சென்னை ரயில் கொள்ளை!  பர்தி பழங்குடி கொள்ளையர்கள் 2 பேர் கைது
Share on FacebookShare on Twitter

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்னசேலம் – விருத்தாச்சலம் இடையே ரயில் வந்த போது இந்த கொள்ளை அரங்கேறியது. ரயில் மேற்கூரையை துளையிட்டு ரூ. 5.78 கோடி மதிப்பிலான கிழிந்த நோட்டுக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் நடைபெற்று சுமார் 2 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இதில் ஈடுபட்ட கொள்ளையர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 38 வயதான தினேஷ் பர்தி, ரோகன் பர்தி ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பர்தி என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இந்த இனத்தவர்கள் சாலையோரங்களில் வசிப்பவர்கள். பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, எளிதாக தப்பி விடுவர் என கூறப்படுகிறது.

5 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேர் ரயிலை துளையிட்டு உள்ளே சென்று நோட்டுக்களை, லுங்கி வேட்டியில் கட்டி, அதனை ரயில் கூரை மீது பயணம் செய்த 3 பேரிடம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் லுங்கியில் சுற்றிய ரூபாய் நோட்டுக்களை, விருத்தாச்சலம் ரயில் நிலையத்திற்கு சற்று தூரம் முன்பு தண்டவாளத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த அந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களிடம் தூக்கி வீசியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். பெரும் புதிராக இருந்த இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விடை கிடைத்துள்ளது.

Tags: CB-CIDSalem-Chennai train robbery
Previous Post

குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை – நடிகர் கமலஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி

Next Post

டெல்லியில் முகமூடி கும்பல் அட்டகாசம்- வங்கி கேஷியரை கொன்று 10 லட்சம் கொள்ளை.

Related Posts

அடையாளம் காணப்பட்ட சொகுசு அறை, அரங்கேறியவை என்னென்ன ???
TopNews

அடையாளம் காணப்பட்ட சொகுசு அறை, அரங்கேறியவை என்னென்ன ???

June 18, 2021
Next Post
டெல்லியில்  முகமூடி கும்பல் அட்டகாசம்- வங்கி கேஷியரை கொன்று 10 லட்சம் கொள்ளை.

டெல்லியில் முகமூடி கும்பல் அட்டகாசம்- வங்கி கேஷியரை கொன்று 10 லட்சம் கொள்ளை.

Discussion about this post

அண்மை செய்திகள்

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

உயிர்கொல்லியாகும் ஓட்டல் உணவுகள்! தரமற்ற உணவுகளை தடுக்காமல் கண்துடைப்பிற்காக சோதனை?

September 21, 2023
வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

வீடுகளை இழந்து வாடும் பொதுமக்கள்! பல ஆண்டுகளாக காக்க வைக்கும் விடியா அரசு!

September 21, 2023
அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!

September 21, 2023
உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

உதயநிதியின் புது உருட்டு!! மக்கள் கையெழுத்து போடணுமா?

September 21, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!

September 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version