நகைக்கடையில் பலரிடம் பண மோசடி! பொதுமக்கள் போராட்டம்

KFJ நகைக்கடை உரிமையாளர்கள் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள BURGERMAN கடை முன்பு பலர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். KFJ என்ற நகைக்கடை சென்னையில் 4 கிளைகளை திறந்து பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்ததன் அடிப்படையில் ஒவ்வொருவரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் உறுதி அளித்தபடி KFJ நிர்வாகம், தாங்கள் செலுத்திய பணத்திற்கு நகை கொடுக்காமல், கடைகளை மூடிவிட்டு, தங்களுடைய பணத்தையும் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களிடம் மோசடி செய்த பணத்தை வைத்து தற்போது சென்னையில் BURGERMAN என்ற பெயரில் கடையை திறந்துள்ளதால், அந்த கடைகள் முன்பு தங்களுடைய போராட்டங்களை முன்னெடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version