செல்பி எடுக்கச் சென்ற இளம் பெண் கிணற்றில் தவறிவிழுந்து பலி

சென்னை அடுத்த ஆவடி அருகே செல்பி எடுக்கச் சென்ற இளம் பெண் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டாபிராம் பகுதியில் வசித்து வந்த மெர்சி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று தன்னுடன் நிச்சயம் செய்த அப்புவுடன், மிட்டனமல்லி பகுதியில் உள்ள வயல் வெளிக்கு சென்றுள்ளார். இருவரும் வயல்வெளியில் விவசாயத்திற்காக தோண்டப்பட்ட கிணற்றின் அருகே செல்பி எடுக்க முயன்ற போது மெர்சி கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற அப்புவும் கிணற்றுக்குள் விழுந்த நிலையில், சத்தம் கேட்டு வந்த அப்பகுதி விவசாயிகள் அப்புவை உயிருடன் மீட்டனர். இருப்பினும் மெர்சி உயிரிழந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், மெர்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version