இளைஞர் கொலை தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடியில் இளைஞர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, திமுக கிளைச் செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்தவர் ரவி என்கிற பார் ரவி. இவர் திமுக 12வது வார்டு கிளைச் செயலாளராக உள்ளார். மேலும், அங்குள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் தர்மக்கர்த்தாவாக உள்ளார்.

இவரது கோயில் நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, இவருக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் செல்வம் வீட்டில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவின் போது, செல்வம் அவரது உறவினர் முத்துக்குமார், முத்துச்செல்வம் ஆகியோரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரில், சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக பார் ரவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version