சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கார் தயாரிக்கும் போட்டி

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கார் தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.

சென்னை ராஜிவ் காந்தி சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான கார் தயாரிக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுக்களாக கலந்து கொண்டனர். பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களை சேர்ந்த உயரதிகாரிகள் நடுவர்களாக பங்கேற்றனர். இதனையடுத்து அவர்களது படைப்புகளை நடுவர்களிடம் எடுத்துரைத்த மாணவர்கள் அவற்றை இயக்கி காண்பித்தனர். இதில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பழைய, புதிய கார் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சி நடைபெற்றது.

Exit mobile version