News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசு

Web Team by Web Team
January 17, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசு
Share on FacebookShare on Twitter

காணும் பொங்கலை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பெரும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஏற்கனவே மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், காலையில் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொடியசைத்து துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஊர் கோயில் காளைகளுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு, வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளை தொடர்ந்து, வாடிவாசலில் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில்,16 காளைகளை பிடித்த ரஞ்சித் என்பவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ஹூண்டாய் சாண்ட்ரோ கார் பரிசாக அளிக்கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய கார்த்தி 2 ஆம் பரிசாக சி.டி.100 பைக்கை பரிசாக பெற்றார். 13 காளைகளை அடக்கிய கணேசன் 3 ஆம் பரிசை வென்றார்.

இதே போன்று பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசை மாரநாடு குலமங்கலம் காளை வென்றது. புதுக்கோட்டையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் அனுராதாவின் காளை இரண்டாம் பரிசை தட்டிச் சென்றது. இதே காளைதான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கார்த்திக் என்பவரின் காளை 3 ஆம் பரிசை வென்றது.

Tags: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
Previous Post

ஆஸி.க்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Next Post

இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

Related Posts

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
TopNews

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

January 17, 2019
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்; மாடுபிடி வீரர்கள் உற்சாகம்
TopNews

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்; மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

January 17, 2019
ஜல்லிக்கட்டின் புகழை ஒட்டுமொத்த உலகுக்கு கொண்டு சென்ற ஊர் அலங்காநல்லூர்
TopNews

ஜல்லிக்கட்டின் புகழை ஒட்டுமொத்த உலகுக்கு கொண்டு சென்ற ஊர் அலங்காநல்லூர்

January 17, 2019
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி
TopNews

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி

January 17, 2019
ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக் கமிட்டி அமைக்கும்
TopNews

ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக் கமிட்டி அமைக்கும்

January 10, 2019
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள்
செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள்

January 10, 2019
Next Post
இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version