ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மனு பெறுகின்றனர்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து விருப்ப மனுக்களை கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா வழங்கி வருகிறார். விருப்ப மனுக்களை ஈரோடு முன்னாள் மேயரும், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான மல்லிகா பரமசிவம், பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் மனோகரன், சூர்யம் பாளையம் பகுதி செயலாளர் கே.சி.பழனிசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்லவக்குமார் சின்னையன், சூரம்பட்டி பகுதி செயலாளர் ஏ.ஆர். ஜெகதீசன் உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர்.

Exit mobile version