பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

10 பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு இனி 4 வங்கிகளாக இயங்குமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்படுகிறது. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது.

Exit mobile version