சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பலத்த சத்தத்துடன் உடைந்த டைல்ஸ் கற்கள்

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தன.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பூங்கா ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் சமீபத்தில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தன. சத்தத்தை கேட்டு ஓடிவந்த ஊழியர்கள், உடனடியாக அப்பாதையை அடைத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நிகழ்ந்தபோது அப்பகுதியில் யாருமில்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இதனிடையே டைல்ஸ் உடைந்து விழுந்ததற்கான காரணம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விசாரித்து வருகிறது.

Exit mobile version