சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில், தான் டெல்லியைச் சேர்ந்தவன் என்றும் தன் பெயர் ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்றும் அந்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். தான் சர்வதேச காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர் என்று குறிப்பிட்டுள்ள அந்த நபர், செப்டம்பர் 30 ஆம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் தன் மகனுடன் சேர்ந்து குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும் எழுதியுள்ளார். கடிதத்தைப் படித்த தலைமைப் பதிவாளர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ள காவல்துறையினர் மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version