News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home உலகம்

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

Web team by Web team
January 31, 2023
in உலகம்
Reading Time: 1 min read
0
பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கக்கூடிய ஒரு மசூதியில் தற்கொலைப் படைத் தீவிரவாதி நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 47பேர் இறந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் தலைநகர் பெஷாவர் ஆகும். நேற்று மதியம் இங்குள்ள மசூதியில் இசுலாமியர்கள் தொழுகை செய்துகொண்டு இருந்தனர். திடீரென்று அங்கு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில் மசூதி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அங்கே பதற்ற சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறையும் மீட்புத் துறையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்த 150 பேர்களிலும் 23 பேர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்ற மசூதி நகரின் காவல் துறை தலைமையகம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ளது. மேலும் இந்தத் தொழுகையில் காவல்துறையினர் பலர் பங்கேற்றுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களில் காவல்துறையினரும் அதிகம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை செயல்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பெஷாவர் நகரம் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி உள்ளதால், தீவிரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்று கூறுகிறார்கள். தாலிபான்கள் இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு பெஷாவரில் ஷியா முஸ்லீம் பிரிவினரின் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. அதில் 58 பேர் இறந்தனர். அதற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுக் கொண்டது. ஆனால் தற்பொது நடந்த தாக்குதலுக்கு இன்னும் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் இச்சம்பவத்தினை செய்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த டிடிபி அமைப்பினராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கும் காவல்துறைக்கும் சமீப காலமாக தொடர்ந்து சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இந்த காலகட்டம் பாகிஸ்தானின் மோசமான காலகட்டமாகும். அவர்களுக்கு அங்கே பொருளாதார வீழ்ச்சியானது ஏற்பட்டு மிகவும் பின்னடைவில் உள்ளனர். இந்த சமயம் பார்த்து பெஷாவரில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: bomb attackbomb blastPakistanpeshawar
Previous Post

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

Next Post

கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

Related Posts

பாகிஸ்தான்..மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு!
உலகம்

பாகிஸ்தான்..மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு!

March 7, 2023
பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் பட்டினி..பொருளாதாரம் சீர்குலைவு!
உலகம்

பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் பட்டினி..பொருளாதாரம் சீர்குலைவு!

March 5, 2023
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் முஷரஃப் காலமானார்!
உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் முஷரஃப் காலமானார்!

February 5, 2023
அரசு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!
உலகம்

அரசு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

January 25, 2023
பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது பாகிஸ்தான்!
உலகம்

பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது பாகிஸ்தான்!

January 24, 2023
pakistan flood damage
உலகம்

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட வெள்ளம்! பிரசவிக்கவுள்ள 47,000 கர்ப்பிணிப்பெண்கள் முகாம்களில் தங்கவைப்பு!

September 5, 2022
Next Post
கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

கல்யாண ராணியிடம் ஏமாந்த திமுக-காரர் !! ”நான் அவன் இல்லை” என மறுக்கும் முகமது ரபீக் !

Discussion about this post

அண்மை செய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து.. 8 தொழிலாளர்கள் மரணம்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

March 22, 2023
நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

உயிர்நாடியான தண்ணீரை பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 22, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

மகளிர் ப்ரீமியர் லீக் – பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ்…எதிரணியாக மும்பையா?..உபியா?

March 22, 2023
“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

“உலக தண்ணீர் தினம்”…ஏன்?..எதற்காக..?

March 22, 2023
இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version