நாகையில் கடல் சீற்றம்: நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருந்த விசைப்படகு மூழ்கியது

நாகையில் கடல் சீற்றத்தால், நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருந்த விசைப்படகு கடலில் மூழ்கியது.

நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீன்பிடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருக்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்படிருந்தது. இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக, அந்தப் படகு மூழ்கத் தொடங்கியது.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வலை உள்ளிட்ட பொருட்கள் அந்தப் படகில் இருந்து மீட்கப்பட்டன. இந்நிலையில், கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version