பாஜக ஆட்சியில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

பாஜக ஆட்சிக் காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில், 6 மாவட்டங்களிலுள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பாஜக ஆட்சிக் காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாஜகவின் அரசியல் மக்கள் சேவையை சார்ந்து இருக்கும் என்று கூறிய அவர், முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி, வஞ்சகம் மற்றும் துரோகத்தின் கூட்டணி என்று விமர்சனம் செய்தார்.

ஜார்க்கண்ட மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக ஆட்சியால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என மக்கள் நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.

Exit mobile version