புவனகிரியில் குளத்தை தூர்வாரிய அரசிற்கு பொதுமக்கள் நன்றி

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட குளம் நிரம்பியதால் மக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

புவனகிரியில் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இலுப்பைக் குளம். முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த குளம் 12 அடி ஆழத்திற்கு தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு இலுப்பைக் குளத்தில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இன்னும் சில நாட்களில் இக்குளம் அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று கூறப்படுகிறது.

எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிறப்பான நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version