முழு அடைப்புக்கு தமிழக மீனவர்கள் ஆதரவு

டீசல் விலையேற்றம் மீனவர்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மீனவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, இன்று நடைபெற்று வரும் பாரத் பந்தில் பங்கேற்றுள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ராமநாதபுரம், நாகை, கடலூர், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று, புதுச்சேரி மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், ஆயிரக் கணக்கான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version