சம்பிரதாய முறைப்படி மத்திய நிதிநிலை அறிக்கையை அச்சடிக்கும் பணிகள் தொடங்கி வைப்பு

மத்திய நிதிநிலை அறிக்கைகளை அச்சடிக்கும் பணிகளை அல்வா வழங்கி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதற்கு முன்னபாக நிதிநிலை அறிக்கைகளை அச்சடிக்கும் பணிகள் நடைபெறும்.   சம்பிரதாய முறைப்படி அல்வா கிண்டி,  அதனை நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படுவது மரபு. அதன்படி, டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சக அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டது. பின்னர் அல்வாவை, நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

Exit mobile version