சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்

சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பாக விருதுநகர், மதுரை ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது…

பவுர்ணமி மற்றும் அமவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசு தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் உணவுப் பொருட்களை மலைப்பகுதியில் சமைப்பதை தவிர்த்து, மலை அடிவாரத்திலேயே தயாரித்து கொண்டு செல்வது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23ம் தேதி தள்ளி வைத்தனர்.

 

Exit mobile version