அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரத்தில் அலைமோதும் பக்தர் கூட்டம்

விடுமுறை நாள் என்பதால் அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.

அத்தி வரதர் வைபவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து சென்றுள்ளனர். நாளுக்கு நாள் பக்தர் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

அத்தி வரதரை தரிசிக்க பக்தர்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க கூடினர். இதையடுத்து நள்ளிரவு ஒரு மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஞாயிற்றுகிழமை வார விடுமுறை என்பதால் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், இன்றும் நள்ளிரவு ஒரு மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version