இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூன்று நபர்களை கட்டிப்போட்டு ஒருவர் கொள்ளை முயற்சி !

திண்டுக்கல் தாடிக்கொம்புச் சாலையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாலைக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். இன்று அதிகாலை வங்கியின் ஊழியர் சிலர் வங்கியைத் திறக்கும் பொழுது சாதாரணமாக அருகிலேயே நின்றிருந்த மர்ம நபர் திடீரென கத்தி மற்றும் மிளகாய்த் தூளைப் பயன்படுத்தி வங்கி ஊழியர்கள் மூவரை கட்டிப் போட்டு வங்கியைக் கொள்ளையிட ஆரம்பித்தார். அதற்குள் உள் நுழைந்த இன்னொரு வங்கி ஊழியர் போலிசாரை வரவழைக்கும் அலாரத்தை அழுத்தினார். பொதுமக்களும் சற்று நேரத்தில் கூடி விட்டதால் வங்கிக் கொள்ளையன் எளிதில் பிடிபட்டான். வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவன் வட மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று தகவல் கிடைத்துள்ளது. போலிசார் அந்த கொள்ளையனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Exit mobile version