துணிவு திரைப்பட பாணியில் திருட்டு!

திருப்பூர் மாவட்டத்தில் துணிவு பட பாணியில் பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை காட்டி வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர் திடீரென துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை காட்டி வங்கி அதிகாரிகளை மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்த போது பொதுமக்கள் சமயோசிதமாக செயல்பட்டு இளைஞரை அடித்து உதைத்து மடக்கி பிடித்தனர். வங்கி அதிகாரிகள் தகவல் அளித்ததின் பேரில் வந்த போலீசார் இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த பொம்மை துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், துணிவு படத்தை பார்த்து கொள்ளை அடிக்க முயன்றதும் தெரிய வந்தது.

Exit mobile version