5 ஆண்டு சட்ட படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைகழத்தின் இணைப்பில், 15 அரசுக் கல்லுாரிகள், 9 தனியார்க் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை தவிர, பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சீர்மிகு சட்ட கல்லுாரியும் செயல்படுகிறது. இந்த கல்லுாரிகளில், பி.ஏ.- எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்பு நடத்தப்படுகிறது. சீர்மிகு சட்ட கல்லுாரியில் எல்.எல்.பி.,யுடன் இணைந்த பி.ஏ., – பி.பி.ஏ., – பி.காம்.,மற்றும் பி.சி.ஏ., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது; வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Exit mobile version