சர்வதேச ஆள் கடத்தல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பயிலரங்கம்

சென்னை பாரிமுனையில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில், சர்வதேச ஆள் கடத்தல் தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் சர்வதேச நீதி அமைப்பு இணைந்து நடத்திய ஆள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், திருவல்லிக்கேணி காவல் இணை ஆணையர் சர்வதேச நீதி அமைப்பின் இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சட்டவிரோத ஆள் கடத்தலுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. சட்ட விரோத ஆள் கடத்தலை தடுக்க பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Exit mobile version