விருதுநகரில் குடிநீர் வடிகால் வாரியம், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பாக மழைநீர் சேகரிப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. மழைநீர் சேகரிப்பு குறித்து தமிழக அரசு, பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து அறிந்து கொண்டனர். முன்னதாக மழைநீர் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில் மழைநீர் உயிர் நீர், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பேரணியாக சென்றனர்.
Discussion about this post