தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்: துணை முதலமைச்சர்

தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்து சிக்கன நடவடிக்கைகளை கடைபிடித்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உலக சிக்கன நாள் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். சேமிப்பையும், சிக்கனத்தையும் வலியுறுத்தி தமிழகத்தில் இன்று உலக சிக்கன நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வாழ்த்து கூறிய துணை முதலமைச்சர், தங்களது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய சிக்கனத்தை கடைபிடித்து பொருளாதார பாதையில் வளர்ச்சி பெற வாழ்த்து கூறியுள்ளார்.

Exit mobile version