பாய்மரப் படகுப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி ரூ.7 கோடி வென்ற ஆஸ்திரேலிய அணி

பிரான்சில் நடைபெற்ற செய்ல் ஜிபி பாய்மரப் படகுப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

செய்ல் ஜிபி சீசன் 1 பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள மார்சில் நகரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக அமைந்த ஜப்பான் அணி வேகமாக முன்னேறிச் சென்றுக் கொண்டிருந்தது. ஜப்பான் அணி தொடர்ந்து முன்னணி வகித்த போதிலும், ஆஸ்திரேலிய அணியினர் கடுமையாக போராடி இறுதி போட்டியில் வெற்றி வாகை சூடினர். மேலும் இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் பரிசுத் தொகையையும் ஆஸ்திரேலிய அணி தட்டிச் சென்றது. 2ம் இடத்தை ஜப்பான் அணி கைப்பற்றியது. 3 வது இடத்தை சீனா கைப்பற்றியுள்ளது.

Exit mobile version