இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அணியில் 7 வயது சிறுவன்

இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணியில் 7 வயது சிறுவன் இடம்பெற்றுள்ளான்.

7 வயதான ஆர்ச்சி சில்லர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது வினோதமான இருதய கோளாறால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகும் சில்லரின் இதயத் துடிப்பு சீரற்று இருந்து வருகிறது. இந்நிலையில் அவனது ஆசை என்ன என்று சில்லரின் தந்தைக் கேட்டபோது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணிக்குக் கேப்டனாவது எனத் தெரிவித்துள்ளான். இதனை ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திற்குத் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆர்ச்சி சில்லரைப் பற்றி அறிந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆர்ச்சிக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் 15-வது வீரராக ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை தன்னால் வீழ்த்த முடியும் என சிறுவன் ஆர்ச்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version