துக்ளக் இதழ் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி

சென்னை மயிலாப்பூரில் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் முண்டகன்னி அம்மன் கோயில் தெருவில் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீடு உள்ளது. மர்ம நபர்கள் சிலர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச வந்துள்ளனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்களை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பம்மல் தமிழ், அயனாவரம் ஜனார்த்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version