பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

தஞ்சாவூரில் பெட்ரோல் போட்டதற்கு பணம் கொடுக்க மறுத்ததோடு, ஊழியரை தாக்கி மிரட்டல் விடுத்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூரில் மணிகண்டன், எட்வின் மற்றும் சர்மா ஆகியோர் கபிஸ்தலத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். இதனையடுத்து பணம் கேட்ட ஊழியருடன் மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மூன்று பேரும் ஊழியரை சரமாரியாக தாக்கியதில் அவர் காயமடைந்தார். மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த மணிகண்டனும் அவரது நண்பர்களும் ஊழியரை பயங்கர ஆயுதங்களால் தக்கியுள்ளனர். இதில் வெட்டுக் காயம் அடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version