ஆந்திராவில் ஸ்ரீ வெங்டேஸ்வரா ஸ்வாமி கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா

திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலைப் போல், ஆந்திரா தலைநகர் அமராவதியில் அமையவுள்ள திருக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.

ஆந்திரா தலைநகர் அமராவதியின் வெங்கடபாலம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அமையவுள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பூஜையில் கலந்துகொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பூமி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version