அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார் அன்வர் ராஜா!

அதிமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் அன்வர் ராஜா தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வேலுமணி தங்கமணி செங்கோட்டையன் ஜெயக்குமார் விஜயபாஸ்கர் உள்ளதோர் உடன் இருந்தனர்.

கட்சியில் இணைந்த பின் அன்வர் ராஜா பேசியது

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் என்ற திருக்குறளுக்கிணங்க ஒத்துவாழும் மிகப் பெரிய குழுவில் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்சியளிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டு இருந்தவரும், அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அன்வர் ராஜா, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டார். ராயப்பேட்டைவில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், மிகப்பெரும் எழுச்சியுடன் செயல்பட்டு வரும் அதிமுகவில், மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அதிமுகவில் மீண்டும் இணைந்ததற்கான காரணத்தை திருக்குறளோடு ஒப்பிட்டு பேசிய அன்வர் ராஜா ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, ஒற்றை முழுவுடன் இணைந்து வாழ்பவன் தான் மனிதன், தனித்து வாழ்பவன் இறந்தவனுக்கு சமம் என்றும் அன்பு ராஜா கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அதிமுகவில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்ற இருப்பதாகவும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாட்களிலும் அதிமுக விக்காகவே பணியாற்றியதாகவும் அன்வர் ராஜா கூறினார்

Exit mobile version