புரட்சித் தலைவியைப் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை – எம்பி சி.வி.சண்முகம் கண்டனம்!

அதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு வருகை புரிந்த அதிமுக எம்பி சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி பின்வருமாறு உள்ளது.

ஆளுமைமிக்க புரட்சித் தலைவி அம்மா அவர்களை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை. மாண்புமிகு அம்மாவைத் தேடி வந்து சந்தித்தவர்கள் மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகியோர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது பாஜகவின் தலைவர்தான். அப்போதெல்லாம் எங்கோ ஓர் மூலையில் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு மாமூல் வாங்கிக்கொண்டிருந்திருப்பார் அண்ணாமலை.

இன்று வீரமாக பேசும் அண்ணாமலை, அன்றைய பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் நட்டாவும், மோடியும் அதிமுகதான் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். அதன் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று சொன்னபோது அப்போதே அதனை எதிர்த்து இருக்க வேண்டிதானே. அதனை விடுத்து திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார்.

Exit mobile version