அண்ணாமலை ஒரு பொம்மை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அண்ணாமலைக்கு கழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைக்கே சரியான பதிலடி கொடுத்திருந்தார். தமிழக பாஜகவினர் பொம்மைகள். அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். ஆனால் தமிழக பாஜக கட்டுப்பாடற்ற இயக்கம். அண்ணாமலை வெறும் பொம்மைதான். அதனை ராஜாவாகவும் வைக்கலாம், பொம்மையாகவும் வைக்கலாம். அகில இந்திய அளவில்தான் அது சரியாக செயல்படுகிறது. ஆண்டவனே பழித்தாலும் அம்மாவை விமர்சித்தவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் தன்னுடைய கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version