ஆந்திராவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு

ஆந்திராவில் ஓடையை கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியின் உடல் பல மணி நேரத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்டது.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா நதி கரையோரத்தை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணா மாவட்டம் செவிட்டிகல்லு கிராமத்தைச் சேர்ந்த கௌதமி பிரியா தனது சகோதரி மற்றும் தந்தையுடன் ஓடையில் மறுகரையில் உள்ள பாட்டி வீட்டிற்கு நாட்டு படகில் சென்றுள்ளார்.

அப்போது நீரின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீந்தி கரைக்கு சென்றனர். கௌதமி பிரியா மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையினர் கௌதமி பிரியாவின் உடலை தீவிரமாக தேடினர். இந்நிலையில் சிறுமியின் உடல் கரை ஒதுங்கியதை அடுத்து உடலை மீட்டனர்.

Exit mobile version