குற்றாலத்தில் கேளிக்கை பூங்கா விரைவில் அமைக்கப்படும்: ஆட்சியர்

குற்றாலத்தில் கேளிக்கை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

நம் தாமிரபரணி இயக்கம் அமைப்பின் சார்பில் குற்றால அருவியின் ஆற்றங்கரை பகுதியில் உள்ள குப்பை கூளங்கள், கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கேளிக்கை பூங்கா அமைப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version