ஆண்டிப்பட்டியில் வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து கட்சி முகவர்கள் ஆலோசனை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து கட்சி முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துக்கட்சிகளின் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் அலுவலர் கண்ணகி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 23 சுற்றுகள் நடைபெறவுள்ளதாக கூறினார். முதல் சுற்றுக்கு 14 டேபிள்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் மற்ற சுற்றுகள் ஆரம்பமாகும் என்றும், ஒவ்வொரு சுற்றுக்கும் நேரம் அதிகமானாலும் அந்த சுற்றுகள் முடிந்த பின்பே மற்ற சுற்றுகள் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version