அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இயான் மோர்கன் ஓய்வு!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு செய்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும் சில நாடுகளில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டிகளிலும் விளையாடி வந்தார். இந்த நிலையில் இன்று அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மோர்கன் அயர்லாந்து நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்த ஓய்வு குறித்து அவர் கூறும்போது, இதுதான் சரியான தருணம் நான் அனைத்துவித போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவது, இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இவர் மொத்தமாக 855 அனைத்துவிதமான போட்டிகளில் விளையாடி 24,000 ரன்கள் சேர்த்துள்ளார். 2019ல் இங்கிலாந்திற்காக முதல் ஒருநாள் உலககோப்பையை வென்று கொடுத்தவர் மோர்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version